கல்வி தரத்தை உயர்த்த யோசனை?

தேர்தல்மூலம் மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் (MLA, MP, Ward Councilor, etc.) எல்லோருடைய குழந்தைகளும், பேரக் குழுந்தைகளும், கொள்ளுப் பேர குழந்தைகளும் (உண்மைதான் அவ்வளவு வயதிலும் பிரதிநிதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்) கண்டிப்பாக அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தான் கற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

அந்த சட்டத்தில் எந்த exception களும், விதிமுறை தளர்தலும், ஓட்டைகளும் இருக்ககூடாது.

இந்த சட்டத்தை மீறும் எவர் பற்றியும் ஆதாரத்தோடு தேர்தல் கமிசனுக்கு ஒரு கடிதம் போட்டால் உடனடியாக அவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு வரும் புகார்கள் 1 மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கையை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை முதல் கட்டமாக எல்லா வாக்காளர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

எப்படி இருக்கு என் யோசனை? பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!!!

மறுமொழி இடுக